பன்றிகளை அடுத்து ஆற்றில் செத்து மிதக்கும் வாத்துக்கள்: சீனாவில் பரவும் அச்சம்

சீனாவில் தண்ணீரும், காற்றும் பெருமளவில் மாசடைந்து விட்டதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷங்காய் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஹுவாங்பூர் ஆற்றில் சுமார் 16 ஆயிரம் பன்றிகள் செத்து மிதந்தன. இவற்றை அகற்றும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மினிஜங் ஆற்றில் கலக்கும் கிளை ஆறான நான்கே ஆற்றில் தற்போது ஆயிரக்கணக்கான வாத்துகள் செத்து மிதந்துக் கொண்டிருக்கின்றன.
குடிநீர் ஆதாரமான ஆற்றில் பன்றிகள் செத்து மிதந்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
வாத்துக்கள் செத்து மிதக்கும் ஆற்றின் தண்ணீர் குடிநீருக்காக பயன்படுத்தப்படாத போதிலும், இந்த ஆற்றுநீர் மற்ற ஆறுகளில் கலக்கும்போது குடிநீரில் நச்சுத்தன்மை ஏற்படும் வாய்ப்புள்ளது என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சீனாவில் ஆளும் அரசு மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்கத் தவறிவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications