டெல்லியில் ஓடும் காருக்குள் பயங்கரம்...35 வயதுப் பெண் மானபங்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ஓடும் காருக்குள் 35 வயதுப் பெண்ணை 3 பேர் சேர்ந்து மானபங்கப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்கு டெல்லியில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் குர்கானிலிருந்து தனது சகோதரியுடன் வந்துள்ளார். ஒரு காரில் லிப்ட் கேட்டு பயணித்தார். இருவரும் டெல்லி புறநகரில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
ஓக்லாவில் அவரது சகோதரி இறங்கி விட்டார். அதன் பின்னர் கார் சங்கம் விஹார் நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது காரில் இருந்த 3 பேர் இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications