விடுதலைப் புலிகளுக்கு ரூ50 லட்சம் கொடுத்த இந்திய அரசு: விக்கிலீக்ஸ்
டெல்லி: இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நட்ட ஈடாக ரூ50 லட்சம் கொடுக்கப்பட்டது என்று பதிவு செய்யப்பட்ட அமெரிக்க தூதரக ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
1988ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி நாளிட்ட அமெரிக்க தூதரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கைக்கான இந்திய தூதர் ஜே.என்.தீட்சித்தை மேற்கோள்காட்டி ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கின்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை அங்கு செல்வதால் புலிகள் வரி வசூலிப்பில் ஈடுபட்டிருந்தது பாதிக்கப்படும் என்பதால் நட்ட ஈடாக ரூ50 லட்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டது இந்த நட்ட ஈடானது 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் விடுதலைப் புலிகளிடம் ஒரே தவணையாக கொடுக்கப்பட்டது.
சென்னையில் இருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர், ராஜிவ் காந்திக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது நிதி உதவிகள் தொடர்பாக ரகசிய பேரம் பேசப்பட்டது. அதன் ஒருபகுதிதான் இந்த ரூ50 லட்சம் என தெரிவித்தார். நாங்கள் காடுகளில் இருந்த போது இந்தப் பணம் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பேதும் இல்லை. இவை அனைத்துமே 'ரா' அமைப்பினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்பட்ட பின்னர் ஏராளமான நிதி உதவி வழஙகவும் இந்தியா உறுதியளித்திருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications