எரிவாயு குழாய்களை அகற்றாமல் முரண்டு பிடிப்பதா?: கெய்ல் நிறுவனத்திற்கு கருணாநிதி கண்டனம்

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை 710 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 'கியாஸ்' கொண்டு செல்லும் குழாய் அமைக்க, 'கெயில்' நிறுவனம் திட்டமிட்டது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு, விவசாய நிலங்கள் வழியாக, இந்தக் குழாய் அமைக்கும் பணியை இந்த நிறுவனம் அண்மையில் துவக்கியது. இதற்கு, விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவின் அடிப்படையில், அரசு தலைமைச் செயலாளரால் இதுபற்றி விவசாயிகளின் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த முதல்-அமைச்சர் ஆணையிட்டதன் பேரில், அந்தக் கூட்டங்களும் நடைபெற்று, அதிலே கலந்து கொண்ட விவசாயிகள் பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அவற்றின் அடிப்படையில் 25.3.2013 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் படித்த அறிக்கையில் 'கெயில் நிறுவனம் விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும். நெடுஞ்சாலைகளின் ஓரமாக குழாய்களைப் பதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே விளைநிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்தினை தமிழக அரசின் சார்பில் நீதி மன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் சார்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், விவசாய நிலங்களில் பதித்துள்ள எரிவாயுக் குழாய்களை இதுவரை அகற்றாமல், கெயில் நிறுவனம், முரண்டு பிடிப்பதாக அங்குள்ள விவசாயிகள் புகார் கூறுகிறார்கள்.
இந்தப் பிரச்சினை காரணமாக நான்கு மாதமாக விவசாயம் செய்ய முடியாமலும், மற்றப் பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்ச முடியாமலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண, இந்த விவசாயிகளின் குறை தீருவதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications