பாகிஸ்தானுக்கு வேவு... இந்திய ராணுவ நிறுவன ஊழியர் ஜெய்ப்பூரில் கைது
ஜெய்ப்பூர்: இந்திய ராணுவ சப்ளை கார்ப்பரேஷனில் பணிபுரிந்து கொண்டே பாகிஸ்தானுக்கு வேவு பார்த்ததாக பி.கே.சின்கா என்பவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாமை சேர்ந்த சின்கா, கடந்த 1995ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் ராணுவ சப்ளை கார்ப்பரேஷனில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மேற்குவங்கத்தின் சிலிகுரிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் பதவி உயர்வு பெற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திரும்பினார். அங்கு பணியாற்றிக் கொண்டே அவர் நேபாளத்தில் இருந்து செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். ராணுவத்தின் மிகவும் முக்கியமான தகவல்களை அவ்வப்போது அந்த ஏஜெண்டுகளிடம் கொடுத்து வந்திருக்கிறார் சின்கா.
இதைக் கண்டுபிடித்த அதிகாரிகள் சின்காவை ஜெய்ப்பூரில் கைது செய்தனர். அவரும் தாம் பாகிஸ்தானுக்காக வேவு பார்த்ததை ஒப்புக் கொண்டார். அத்துடன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரும் தமக்கு உதவியாக இருந்ததையும் அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார். தற்போது 7 நாள் போலீஸ் விசாரணையில் இருக்கும் சின்காவிடம் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications