என்னை பெட் கட்டத் தூண்டியதே வின்து தாரா சிங் தான்: மெயப்பன்
Subscribe to Oneindia Tamil

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது சென்னை அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பன் சார்பில் தான் பெட் கட்டியதாக தெரிவித்தார்.
இதையடுத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி மெய்யப்பனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தற்போது அவர்கள் மெய்யப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தன்னை பெட் கட்டத் தூண்டியதே வின்து தாரா சிங் தான் என்று மெய்யப்பன் தெரிவித்துள்ளார். மேலும் தான் பெட் கட்டி ரூ. 1 கோடி இழந்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications