5 குழந்தைகளை கொன்ற கொடூரத் தந்தைக்கு மரண தண்டனை: உ.பி கோர்ட்
Subscribe to Oneindia Tamil
காசியாபாத்: உத்தரப்பிரதேசம் காசியாபாத் மாவட்ட விஜயநகர் கிராமத்தில் ரவீந்திர வெர்மா, தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மற்றும் சில பிரச்சினைகளால், ஈவு இரக்கமின்றி தனது 9 மாத குழந்தை முதல் 13 வயது வரையிலான 5 குழந்தைகளை கொடூரமாக கொன்றார். தனது மனைவியை தாக்க முற்பட்ட போது, அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
இந்த கொலை குற்றங்களுக்காக தொடரப்பட்ட வழக்கில் நேற்று காசியாபாத் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், ரவீந்திர குமார் வெர்மாவுக்கு மரணதண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications