டெல்லி மாநாடு: கர்நாடகத்தை ’நக்சலைட்’ பாதித்த மாநிலமாக அறிவிக்க சித்தராமையா வலியுறுத்தல்
டெல்லி: நேற்று டெல்லியில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகத்தை நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று, உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர் பிற மாநில முதலமைச்சர்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.
மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசும்போது, 'மத்திய அரசு மாநிலங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு சில முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும். இந்த புதிய திட்டமானது மாநில அரசுகளில் அதிகாரத்தை பாதிக்காத வண்ணம் செயல்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையமான தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு தீவிரவாத அமைப்புகளை தடுப்பதில் பன்முக தன்மையை வெளிகட்ட வேண்டும். கர்நாடக அரசு மாநிலங்களுக்கு இடையேயும், மத்திய உளவுத்துறை மற்றும் போலீசாருக்கு இடையே தீவிரவாதத்தை ஒழிக்க ஒரு சுமுகமாக இணைப்பை ஏற்படுத்த விரும்புகிறது.கர்நாடகத்தில் தற்போது நக்சலைட்டுகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கர்நாடக மாநிலத்தை நாக்சலைட்டுகள் பாதிப்பு மாநிலமாக அரசு அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசு சார்பில் கடற்கரையில் ரோந்து பணிக்காக அளிக்கப்பட்ட கோவா கடற்படை நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட படகுகள் தரமின்றி உள்ளது. இதனால் அவை எந்த பணிக்காக அளிக்கப்பட்டதே அதை செய்ய முடியாமல் உள்ளோம். எனவே தரமானது மற்றும் அனைத்து கால நிலைகளிலும் பாதிக்கப்படாத படகுகளை வழங்க வேண்டும்.மேலும் பாதுகாப்பு படகுகளை இயக்க தேவையான எரிபொருள் செலவை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. எனவே ரோந்து படகுகளுக்கான எரிபொருளை முறையாக வழங்க அரசு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மத்திய அரசு மாநிலத்தில் உளவு துறையை பலப்படுத்த உதவி செய்ய வேண்டும்.
தற்போது மாநிலத்தில் சைபர் குற்றங்கள் பெருகி வருகிறது. இதனால் தனிமனிதர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமுதாயமே பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து தற்போது யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே சைபர் குற்றங்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்ளது' என வலியுறுத்திப் உரையை முடித்தார் சித்தராமையா.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications