ஐபிஎல் பெட்டிங்: சிபிசிஐடி போலீஸ் முன்பு ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

IPL betting: Vikram Agarwal appears before TN CB-CID
சென்னை: ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் இன்று காலை தமிழக சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜர் ஆனார்.

ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கும் சென்னையில் உள்ள பிரபல ரேடிசன் ப்ளூ ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கும் தொடர்பு உள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து விக்ரம் தலைமறைவாகிவிட்டார். அதன் பிறகு மும்பை குற்றப்பிரிவு போலீசார் அவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். பின்னர் அவர் மும்பை போலீசார் முன்பு கடந்த 31ம் தேதி ஆஜரானார். இந்நிலையில் அவர் ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக தமிழக குற்றப்பிரிவு போலீசார் முன்பு இன்று காலை ஆஜரானார்.

முன்னதாக அவர் ஆஜராக கால அவகாசம் கேட்டார். அவர் சில தரகர்களை தன்னுடைய ஹோட்டலில் இருந்து செயல்பட அனுமதித்துள்ளார். இதனால் அவரது ஹோட்டலில் போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+