நிரா ராடியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லையாம்: சிபிஐ, வருமான வரித்துறை முடிவு
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐயும் வருமான வரித்துறையும் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து நிரா ராடியா தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வைஷ்ணவி குரூப் என்ற பெயரில் பப்ளிக் ரிலேசன்ஸ் நிறுவனம் நடத்தி வந்த நிரா ராடியாவின் கிளையன்டுகளில் முக்கியமானவர்கள் டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களுக்காக அவர் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராசாவிடம் லாபி செய்தார் என்பது குற்றச்சாட்டு.
தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடனான நிரா ராடியாவின் உரையாடல் அடங்கிய 5,800 டேப்புகளை பரிசோதித்து, அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், சிபிஐ மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் என 6 பேர் அடங்கிய குழு கடந்த ஏப்ரல் முதல் டேப்புகளைக் கேட்டு அறிக்கை தயாரித்துள்ளது.
எந்த குற்ற நடவடிக்கைகளிலும் நிரா ராடியா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லையாம்.
இந்த முடிவுக்கு அதிகாரிகள் குழு வந்துவிட்டது. இதனால் நிரா ராடியாவை விடுவிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்வர் என்று தெரிகிறது.