மதுரை: அடகுக் கடை உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.60 லட்சம் நகை கொள்ளை
மதுரை: மதுரையில் நகை அடகுக்கடை உரிமையாளரின் கையை கட்டிப் போட்டு சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மதுரை பசுமலைப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோயில் தெருவில் அடகுக்கடை வைத்துள்ளார். கடையில் பசுமலைப் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவர் மேனேஜராக உள்ளார்.
இந்த நிலையில், நேற்று பகல் 11 மணியளவில் கடைக்கு வந்த இரண்டு பேர் தங்கத் தோடு அடகு வைக்க வேண்டும் எனக் கூறி யுள்ளனர். தெரிந்தவர்கள் மூலம் வந்தால்தான் நகையை அடகு வாங்க முடியும் என துரைப்பாண்டியன் கூறியுள்ளார்.
உடனே வந்தவர்களில் ஒருவர் வெளியே சென்றுள்ளார். அப்போது, அவர்கள் கொண்டுவந்த தங்கத் தோடை சரிபார்க்க துரைப்பாண்டி முயன்றுள்ளார். உடனே அடகு வைக்க வந்த நபர் துரைப்பாண்டியின் கைகளை முதுகுப்பக்கமாகத் திருப்பி பிடித்துக் கொண்டதாகவும், வெளியே சென்றவர் திரும்பி வந்து, அங்கிருந்த துணியால் கைகளைக் கட்டியதுடன், வாயில் துணியைத் திணித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, லாக்கரில் இருந்த நகைகளை சாக்கில் அள்ளிப் போட்டுக் கொண்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்தில் கடைக்கு வந்த நபர் ஒருவர் துரைப்பாண்டியனின் கைக்கட்டை அவிழ்த்து விட்டுள்ளார். அதன்பிறகே கொள்ளைச் சம்பவம் தெரியவந்துள்ளது. போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் துறையினர் வந்து கைரேகைகளைச் சேகரித்தனர்.
கடை மேலாளர் துரைப்பாண்டியனிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பதற்றமின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.60 லட்சம் எனக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மர்ம நபர்கள் கொள்ளையடித்த நகைகளுடன் மோட்டார் சைக்கிளில் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
மர்ம நபர்கள் தாக்கியதில் துரைப்பாண்டியனுக்கு வலது கை, இடது கை மேற்பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. துரைப்பாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications