நாட்டின் தலைமையை நரேந்திர மோடி ஏற்க வேண்டும்: பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல்
மாதேபூர்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாட்டின் தலைமையை ஏற்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் கூட்டணியின் கட்சியான சிரோமணி அகாலி தளத்தின் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் அழைப்பு விடுத்திருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் மாதோபூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பிரசாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் பங்கேற்ற முதலாவது பொதுக்கூட்டம் இது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரகாஷ் சிங் பாதல், குஜராத் முதல்வராக உள்ள மோடி இனி நாட்டுக்குத் தலைமையேற்க வேண்டும். பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறும் என்ற நம்பிக்கைக்கு உயிர் கிடைத்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நரேந்திர மோடிக்கு உறுதியளிக்கிறேன். மத்திய அரசின் நடவடிக்கையால் உள்நாட்டிலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எல்லையிலும் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றார் அவர்.
பாஜகவின் தேசிய பிரசாரக் குழுவின் தலைவராக மோடி நியமிக்கப்பட்டதை எதிர்த்து 17 ஆண்டு கால கூட்டணி உறவை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது. ஆனால் மற்றொரு கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளமோ முழு ஆதரவை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications