எவ்ளோ பெரிய நிலா… மேக மூட்டத்திற்கு நடுவே 14% பெரிதாக தெரிந்தது!
சென்னை: பூமியின் அருகில் நிலா வந்த காரணத்தால் நேற்று வழக்கத்தை விட நிலா 14 சதவீதம் பெரிதாக தெரிந்தது. இதை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து ரசித்தனர்.
குறிப்பாக 28 மாதங்களுக்கு ஒரு முறை நிலா இப்படி பூமிஙக்கு மிக அருகில் வரும் அப்போது நிலா வழக்கத்தை விட பெரியதாக தெரியும்.
கடந்த 2 நாட்களாக இரவில் நிலா வழக்கத்தை விட, பெரிய அளவில் தெரிந்தது. இதை பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடிகளிலும் இருந்தும், உயரமான கட்டிடங்களில் இருந்தும் ரசித்து பார்த்தனர்.
இது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானி அய்யம்பெருமாள் கூறியதாவது:

சூப்பர் மூன்
‘‘நிலா, பூமியின் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. 28 மாதங்களுக்கு ஒரு முறை சுற்றி வரும்போது, 3 லட்சத்து 57 ஆயிரத்து 400 கி.மீட்டர் தூரத்திற்கு செல்லும். அப்போது, வழக்கத்தை விட, நிலா பெரிதாக தெரியும். ஆனால், நிலா அளவில் மாற்றம் ஏதும் இருக்காது. இதை ‘சூப்பர் மூன்' என்பார்கள்.

14 சதவிகித பெரியது
குறிப்பாக 12 சதவீதத்தில் இருந்து 14 சதவீதம் பெரியதாக தெரியும். கடந்த 2 நாட்களாக (சனி, ஞாயிறு) இப்படி வானத்தில் தெரிகிறது. இதனால், எந்த பாதிப்பும் கிடையாது. அச்சப்பட தேவையில்லை.
இதற்கு முன்பு 2011ம் ஆண்டு மார்ச் 11ல் இந்த சூப்பர் மூன் தெரிந்தது. இதையடுத்து, வரும் 2015ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 29ம் தேதி இரவில் தெரியும்'' என்று கூறினார்.

மேகமூட்டத்திற்கு நடுவே
நேற்று சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இருந்தாலும் அவ்வப்போது கொஞ்சம் நிலா எட்டிப் பார்த்தது. அப்போது மொட்டை மாடியில் நிலாச் சோறு சாப்பிட்டுக் கொண்டே நிலவை பார்த்து ரசித்தனர் சென்னை மக்கள்.












Click it and Unblock the Notifications