இஷ்ரத் வழக்கு: 'தலைமறைவு' போலீஸ் அதிகாரி பாண்டே ஆம்புலன்சில் கோர்ட்டில் ஆஜர்!
அகமதாபாத்: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் என்கவுன்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி பிபி பாண்டே ஆம்புலன்சில் படுத்தபடியே இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள் என்று மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான், ப்ரனேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய 4 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது போலி என்கவுன்ட்டர் என்று கூறியதுடன் குஜராத் போலீஸ் அதிகாரிகள் பிபி பாண்டே உள்ளிட்டோர் மீதும் ஐபி அதிகாரி ராஜேந்திர குமார் மீதும் குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் காவல்துறை அதிகாரி பிபி பாண்டே நீண்டகாலம் தலைமறைவாக இருந்தார். அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே அவர் தம்மை கைது செய்ய தடை கோரி அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை வெள்ளிக்கிழமையன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 2 நாட்களுக்கு பாண்டேவை கைது செய்ய தடை விதித்ததுடன் இன்று விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை திடீரென தமக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார் பாண்டே. பின்னர் ஆம்புலன்ஸிலேயே அவர் நீதிமன்றத்துக்கு வந்தார். ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே அவர் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். பாண்டேவை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர் திடீரென உடல்நலக் குறைவு என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications