இஷ்ரத் வழக்கு: 'தலைமறைவு' போலீஸ் அதிகாரி பாண்டே ஆம்புலன்சில் கோர்ட்டில் ஆஜர்!
அகமதாபாத்: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் என்கவுன்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி பிபி பாண்டே ஆம்புலன்சில் படுத்தபடியே இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள் என்று மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான், ப்ரனேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய 4 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது போலி என்கவுன்ட்டர் என்று கூறியதுடன் குஜராத் போலீஸ் அதிகாரிகள் பிபி பாண்டே உள்ளிட்டோர் மீதும் ஐபி அதிகாரி ராஜேந்திர குமார் மீதும் குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் காவல்துறை அதிகாரி பிபி பாண்டே நீண்டகாலம் தலைமறைவாக இருந்தார். அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே அவர் தம்மை கைது செய்ய தடை கோரி அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை வெள்ளிக்கிழமையன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 2 நாட்களுக்கு பாண்டேவை கைது செய்ய தடை விதித்ததுடன் இன்று விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை திடீரென தமக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார் பாண்டே. பின்னர் ஆம்புலன்ஸிலேயே அவர் நீதிமன்றத்துக்கு வந்தார். ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே அவர் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். பாண்டேவை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர் திடீரென உடல்நலக் குறைவு என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications