ஆந்திரா பிரிவினை: அதிர்ச்சியில் 7 பேர் மரணம்: 10 பேர் தற்கொலை முயற்சி

ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இந்த நிலையில் விஜயவாடா, அஜீத் சிங் நகரில் ஒரு மாணவியின் உருக்கமான பேச்சை கேட்டு குருசாமி என்பவர் அதிர்ச்சியில் உயிர் இழந்தார்.
அனந்தபூர் சாதிபத்ரி என்ற ஊரில் சுப்பிரமணியம் என்பவரும் கிருஷ்ணா மாவட்டம் மல்லவள்ளி என்ற ஊரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பத்மநாபன் என்பவரும் டி.வி. செய்தியை பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.
இதே போல் குண்டூர் மாவட்டத்தில் சிவாஜி என்பவரும், விஜயநகர மாவட்டத்தில் அரிபாபு என்பவரும் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை டி.வி.யில் பார்த்து அதிர்ச்சி அடைந்து பலியானார்கள்.
மாரடைப்பு, தற்கொலை
விஜய நகரம் தாதில் பூடியில் ஊர்க்காவல் படை வீரர் சீனிவாசராவ் என்பவர் தெலுங்கு பேசும் மக்களை பிரித்து விட்டார்களே என வேதனை அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குண்டூரில் மின்வாரிய ஊழியர் சேக் காஜா அலி அரசியல் தலைவர்களின் காலை பிடித்து கதறி அழுததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாரடைப்பில் உயிர் இழந்தார்.
10 பேர் கவலைக்கிடம்
இது தவிர பல்வேறு இடங்களில் 10 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். கிழக்கு கோதாவரியில் பாப்ஜி என்ற வாலிபர் செல்போன் டவரில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. தற்கொலை முயற்சி செய்த 10 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications