உ.பி.மசூதி சுவரை இடித்தது மணல் மாஃபியா கோஷ்டிதான்.. ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை: வக்பு உறுப்பினர்
லக்னோ: நொய்டாவில் மசூதி சுவரை இடித்தது இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி அல்ல.. உள்ளூர் மணல் மாஃபியாக்கள்தான் சுவரை இடித்தனர் என்று அம்மாநில வக்பு வாரிய உறுப்பினர் காதிர் கான் ஜயஸ்வால் தெரிவித்துள்ளார்.
மசூதி சுவரை இடிக்க உத்தரவிட்டு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்த்தார்ல் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி. இதனால் அவர் சஸ்பென்ட் செய்யப்படுகிறார் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனாலும் உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி அரசோ தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த வக்பு வாரிய உறுப்பினர் காதிர் கான், மசூதியின் சுவரை இடிக்க உத்தரவிட்டது துர்கா சக்தி அல்ல. அவர் சம்பவ இடத்தில் இருந்து கிளம்பிச் சென்ற பின்னர் உள்ளூர் மணல் மாஃபியா கும்பல்தான் அந்த சுவரை இடித்தது.
ஜூலை 27-ந் தேதியன்று உரிய அனுமதி இல்லாமல் மசூதி கட்டப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்தே சம்பவ இடத்துக்கு துர்கா சக்தி சென்றார். உள்ளூர் மணல் மாஃபியா, வக்பு வாரியத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அவர்கள் அனைவருமே சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளர்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தியை பலிகடாவாக்கிவிட்டனர் என்றார்.
ஆனால் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவோ இதை நிராகரித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்திதான் தவறு செய்தார் என்று கூறி வருகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications