பார்லி. கூட்டத்தில் பாதி நாட்கள் பங்கேற்காத சோனியா, ராகுல்!
டெல்லி: பார்லிமென்ட் கூட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பாதி நாட்கள் கலந்து கொள்ளவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 314 நாட்கள் பார்லிமென்ட் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் எம்.பிக்களின் பங்கேற்பு தொடர்பான புள்ளி விவரத்தை லோக்சபா இணையதளம் வெளியிட்டுள்ளது.
சோனியா, ராகுல்
காங்கிரஸ் தலைவர் சோனியா 48%, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 43% கூட்டங்களிலேயே கலந்து கொண்டனர்.
முலாயாம், அத்வானி, ராஜ்நாத் டாப்
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் 86% கூட்டங்களிலும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி 82%, ராஜ்நாத்சிங் 80% நாட்களும் பங்கேற்றனர்.
சரத் யாதவ், லாலு யாதவ்
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் 83%, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் 70% நாட்களும் சபைக்கு வந்துள்ளனர்.
120 எம்.பிக்கள்
மொத்தம் 120 எம்.பி.க்கள் 90%க்கும் அதிகமான கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.