காங். இருப்பது இந்தியாவிலா? இல்ல.. பாகிஸ்தானுடன் சேர நினைக்கிறதா? கொந்தளித்த யஷ்வந்த் சின்ஹா
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்றத்தில் அமளி, துமளிக்கு இடையே பேசிய பாஜக எம்.பி. யஷ்வந்த் சின்ஹா, மும்பையில் பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்றியது. அதன் பின்னரும் கூட மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் உருப்படியான நடவடிக்கை எடுக்காமல், விட்டு விட்டது என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதில் கோபமடைந்த யஷ்வந்த் சின்ஹா, உண்மையில், காங்கிரஸ், இந்தியாவுடன் இருக்கிறதா, இல்லை பாகிஸ்தானோடு சேர நினைக்கிறதா? என்று அதிரடிக் கேள்வியை கொந்தளிப்புடன் கேட்டார் சின்ஹா.
இதனால் நாடாளுமன்றத்தில் மேலும் கூச்சல், குழப்பம் அதிகரித்தது. காங்கிரஸ் எம்.பிக்கள் ஒன்று திரண்டு சின்ஹாவை முற்றுகையிட்டனர்.












Click it and Unblock the Notifications