தொடரும் கூர்க்காலாந்து முழக்கம்! அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு!! 400 பேர் கைது!!
டார்ஜிலிங்: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங் மலை பிரதேசத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. அடுத்த 15 நாட்களுக்கான போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 400 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலைபிரதேசத்தை பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன. ஆனால் ஒருபோதும் தனி மாநில கோரிக்கையை ஏற்க முடியாது என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்து போராட்டத்தைக் கைவிட கெடுவும் நிர்ணயித்தார்.
இருப்பினும் மமதாவின் கெடுவை மீறி போராட்டம் தொடர்ந்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக கூர்க்காலாந்து கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. நாளை முதல் 23-ந் தேதி வரை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் போராட்டத்தை நடத்தப்படும் என்றும் மரம் மற்றும் தேயிலை ஆகியவற்றை டார்ஜிலிங் மலையில் இருந்து எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டப் பகுதியில் ஆங்காங்கே பேரணிகளும் நடைபெறும் என்றும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வர்த்தக நிறுவனங்களை மூடிவிட வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் உலகம் முழுவது இருக்கும் கூர்க்கா இனத்தவர் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஃபேக்ஸ் அனுப்பும் போராட்டம் நடத்துகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29-ந் தேதி கூட்டு நடவடிக்கைக் குழு கூடி புதிய போராட்டம் பற்றி விவாதிக்க இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications