மியான்மர் ஊடுருவல்.. மோரே செல்கிறது மணிப்பூர் அமைச்சர்கள் குழு!!
இம்பால்: எல்லைப் பகுதியான மோரே அருகே மியான்மர் நாட்டு ராணுவம் ஊடுருவி இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சிப்பதைத் தொடர்ந்து மணிப்பூர் அமைச்சர்கள் குழு அங்கு நிலைமையை பார்வையிட செல்கிறது.
பாகிஸ்தான், சீனாவை தொடர்ந்து, மியான்மர் ராணுவமும் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு முகாம் அமைக்க முயற்சிக்கிறது. எல்லை நகரமான மோரேவில் தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்களை கபளீகரம் செய்யும் வகையில் எல்லை வேலிகளை அமைக்கவும் மியான்மர் முயற்சித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில முதல்வர் இபோபிசிங், இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக குழு மோரே நகருக்கு வந்து ஆய்வு நடத்தியது. பின்னர் மணிப்பூர் ஆளுநர் அஸ்வனி குமாரும் மோரேவில் சர்ச்சைக்குரிய இடங்களைப் பார்வையிட்டார்.
இந்த நிலையில் மணிப்பூர் அமைச்சர்கள் குழுவும் மோரே நகருக்கு சென்று எல்லை நிலைமைகளைப் பார்வையிட இருக்கிறது.












Click it and Unblock the Notifications