For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சை கோர்ட்டில் ஆஜராகத் தவறினார் விஜயகாந்த்.. பிடிவாரண்ட் பிறப்பிப்பு

Google Oneindia Tamil News

Tanjore court issues arrest warrant against Vijayakanth
தஞ்சாவூர்: அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜராகத் தவறியதால் அவருக்கு எதிராக தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்தது.

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 30ம்தேதி தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இவ்விழாவில் பேசிய விஜயகாந்த் தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக கூறி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் குப்புசாமி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. பலமுறை உத்தரவிட்டும் விஜயகாந்த் வரவில்லை.

இந்த நிலையில் இன்று விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சேதுமாதவன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்றும் வரவில்லை விஜயகாந்த். இதையடுத்து அவருக்கு எதிராக நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

English summary
Tanjore sessions court has issued arrest warrant against DMDK president Vijayakanth as he failed to appear in person today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X