முன்னாள் காதலரை கொன்று உடலை வெட்டி பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    முன்னாள் காதலரை கொன்று பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்

    அபுதாபி: அபுதாபியில் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலரை கொலை செய்து அவரின் உடலை சமைத்து கட்டுமானப் பணி செய்யும் ஆட்களுக்கு கொடுத்துள்ளார்.

    மொராக்கோவை சேர்ந்த 30 வயது பெண் அபுதாபியில் வசித்து வருகிறார். அவர் 20களில் இருக்கும் நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே இவரை பிரிந்துவிட்டார்.

    Woman kills former boy friend and cooks his remains

    இந்த காரணத்தால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை கொலை செய்து உடலை துண்டு போட்டு அரிசி, கறியுடன் சேர்த்து பிரியாணி சமைத்து கட்டுமானப் பணி செய்து வரும் பாகிஸ்தானியர்களுக்கு விருந்தாக அளித்துவிட்டார்.

    தாங்கள் சாப்பிடுவது மனித கறி என்று தெரியாமல் அவர்களும் சாப்பிட்டுள்ளனர். மீதமுள்ள கறியை அவர் நாய்க்கு போட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இது குறித்து தற்போது தான் தெரிய வந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட நபரை தேடிக் கொண்டு அந்த நபரின் சகோதரர் மொராக்கோ பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். சமையல் அறையில் இருந்த பாத்திரம் ஒன்றில் மனித பல் இருப்பதை பார்த்து சந்தேகம் ஏற்பட்டு அவர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வந்து விசாரித்தபோது தான் தனது முன்னாள் காதலரை பழி வாங்க அவரை கொலை செய்ததை அந்த பெண் ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணும், கொலை செய்யப்பட்ட நபரும் 7 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த நபர் மொராக்கோவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+