ஜெயங்கொண்டத்தில் "பயங்கரம்".. காளான் பறிக்க சென்ற 2 பெண்கள் வெட்டிக்கொலை! சிதைந்து கிடந்த முகங்கள்
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே காளான் பறிக்கச் சென்ற இரண்டு பெண்களை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியபாளையம் கிராமம் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவில் தைல மரக்காடு அமைந்து இருக்கிறது. இங்கு மழை காரணமாக காளான்கள் அதிகளவில் வளர்ந்து இருந்தன.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவரது மனைவி கண்ணகி (வயது 50) மற்றும் கலைமணி என்பவரது மனைவி மலர்விழி (வயது 29) ஆகியோர் நேற்று காலை காளான் பறிக்கச் சென்றனர்.

தைலமரக் காட்டில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் காளான்களை பறிக்க சைக்கிளில் சென்ற இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அவர்களது குடும்பத்தினர் ஊர் முழுவதும், தைல மரக் காட்டிலும் தேடி அலைந்து உள்ளனர்.
அப்போது அவர்கள் பெரியபாளையத்தில் இருந்து கழுவதொண்டி செல்லும் சாலையில் இருவரும் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே
காளான் பறிக்க சென்றது தெரியவந்தது. சைக்கிள் கிடைக்கும் இடத்திலிருந்து பாதை வழியாக உள்ளே சென்று பார்த்த போது 2 பெண்களின் உடல்களும் முகங்கள் சிதைக்கப்பட்டு அறிவாளால் வெட்டப்பட்டு கிடந்தன.
இது தொடர்பாக ஊர் மக்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பெண்கள் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications