Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயங்கொண்டத்தில் "பயங்கரம்".. காளான் பறிக்க சென்ற 2 பெண்கள் வெட்டிக்கொலை! சிதைந்து கிடந்த முகங்கள்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே காளான் பறிக்கச் சென்ற இரண்டு பெண்களை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியபாளையம் கிராமம் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவில் தைல மரக்காடு அமைந்து இருக்கிறது. இங்கு மழை காரணமாக காளான்கள் அதிகளவில் வளர்ந்து இருந்தன.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவரது மனைவி கண்ணகி (வயது 50) மற்றும் கலைமணி என்பவரது மனைவி மலர்விழி (வயது 29) ஆகியோர் நேற்று காலை காளான் பறிக்கச் சென்றனர்.

2 women murdered near Jayankondam in Ariyalur District

தைலமரக் காட்டில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் காளான்களை பறிக்க சைக்கிளில் சென்ற இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அவர்களது குடும்பத்தினர் ஊர் முழுவதும், தைல மரக் காட்டிலும் தேடி அலைந்து உள்ளனர்.

அப்போது அவர்கள் பெரியபாளையத்தில் இருந்து கழுவதொண்டி செல்லும் சாலையில் இருவரும் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே
காளான் பறிக்க சென்றது தெரியவந்தது. சைக்கிள் கிடைக்கும் இடத்திலிருந்து பாதை வழியாக உள்ளே சென்று பார்த்த போது 2 பெண்களின் உடல்களும் முகங்கள் சிதைக்கப்பட்டு அறிவாளால் வெட்டப்பட்டு கிடந்தன.

இது தொடர்பாக ஊர் மக்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பெண்கள் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+