அரியலூர் ஆண் குழந்தை பலியான வழக்கில் ட்விஸ்ட்.. மூட நம்பிக்கையால் சொந்த பேரனை கொன்ற வீரமுத்து
அரியலூர்: அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை டிரம் தண்ணீரில் முக்கி கொலை செய்த தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மூடநம்பிக்கையால் பேரக்குழந்தையை அவர் கொலை செய்ததாக போலீசில் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து - ரேவதி தம்பதி. இவர்களுக்கு அனுசியா, சுகன்யா, சங்கீதா என்று 3 மகள்கள் இருக்கிறார்கள். இதில், அனுசியா உள்ளூரிலேயே திருமணம் ஆகி அங்கேயே வசித்து வருகிறார்.

சங்கீதாவை கடந்த 16 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். பாலமுருகன் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பாலமுருகன் - சங்கீதாவுக்கு கடந்த சித்திரை மாதம் ஒரு மகன் பிறந்துள்ளான்.
இதையடுத்து சங்கீதா தாய் வீடான அரியலூருக்கு வந்தார். அந்த குழந்தைக்கு சாத்விக் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் திருப்பூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பாலமுருகன் மகன் சாத்விக்கை பார்த்து விட்டு சென்றார். இந்த நிலையில் வழக்கம் போல், கடந்த 13 ஆம் தேதி இரவு, குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு சங்கீதா வீட்டில் தூங்கினார்.
அவரது அருகே சங்கீதாவின் தாய் ரேவதியும் அக்காள் சுகன்யாவும் படுத்து இருந்தனர். மற்றொரு அறையில் அவரது தந்தை வீரமுத்து படுத்திருந்தார். இந்த நிலையில் காலையில் சங்கீதா எழுந்து பார்க்கையில் குழந்தை சாத்விக்கை காணவில்லை. இதனால் நாலாபுறமும் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் குழந்தை தண்ணீர் டிரம் அருகே வேஷ்டி துணியால் சுற்றப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா கதறி அழுதார். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் உடலை பிரதே பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் குழந்தை இறந்தது எப்படி என்று தெரியவில்லை என கூறி வந்துள்ளனர்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சங்கீதாவுக்கு பிறந்த ஆண் குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததாலும், இதனால் வீட்டில் நல்லதே நடக்காது என்றும் கருதி மூட நம்பிக்கையால் குழந்தையின் தாத்தாவே பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை டிரம் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது.
வீரமுத்துவுக்கு இந்த பேரக்குழந்தை பிறந்ததில் இருந்தே ஒரு பயம் இருந்து வந்துள்ளது. சித்திரை மாதத்தில் தலைப்பிள்ளை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது என்றும், குறிப்பாக தாத்தாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், குடும்பத்தில் பன கஷ்டம் ஏற்படும் என்றும் ஜோதிடர் சொன்னதை கருதி ஒரு வித பயத்திலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை டிரம் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் யாருக்கும் தெரியாமல் குழந்தையை வேஷ்டி துணியில் சுற்றி கீழை வைத்துவிட்டு, குடும்பத்தினர் குழந்தையை காணவில்லை என்று சொன்னபோது இவரும் அவர்களோடு சேர்ந்து தேடுவதுபோல் நாடகம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தான் வீரமுத்து உண்மையை சொல்லியிருக்கிறார். பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தையை தாத்தாவே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வீரமுத்துவை கைது செய்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications