பைசா கோபுரம் போல் திடீரென்று சாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!
பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று சாய்ந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று சாய்ந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கட்டிடம் முழுவதாக கீழே விழாமல் சாய்ந்த நிலையில் தொங்கி கொண்டு இருக்கிறது.
பெங்களூரில் நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கிறது. நகரம் முழுக்க வானுயர குடியிருப்புகள் அதிக அளவில் இருக்கிறது. இந்த நிலையில்தான் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று சாய்ந்தது.
பெங்களூரில் ஹெப்பால் கேம்பபுரா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றுதான் இப்படி சரிந்துள்ளது. பைசா கோபுரம் போல இந்த கட்டிடம் சரிந்து உள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நேற்று
நேற்று மாலை திடீர் என்று இந்த கட்டிடம் சரிந்தது. மக்கள் உள்ளே இருக்கும் போதே திடீர் என்று கட்டிடம் சரிந்தது. ஆனால் கட்டிடம் முழுவதாக கீழே விழுந்து நொறுங்கவில்லை. இந்த கட்டிடம் ஐந்து வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மொத்தம் 8 வீடுகள் உள்ளே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|
வெளியேற்றம் செய்தனர்
இந்த வீடுகளில் உள்ளே எல்லோரும் தற்போது வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 8 குடும்பம் இங்கே இருந்தது. சுமார் 35 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எதிர் வீட்டில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அங்கு தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
|
என்ன காரணம்
அனுமதி வாங்காமல் கட்டிடம் கட்டியதுதான் இதற்கு காரணமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். இங்கு 5 மாடி உயரத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தது யார். இந்த கட்டிடம் வரும் முன் இங்கே வேறு என்ன கட்டிடம் இருந்தது. கீழே நீர்நிலைகள் எதுவும் இருந்ததா என்று விசாரித்து வருகிறார்கள்.

யார் போலீஸ்
இந்த அபார்ட்மெண்ட் ஓனர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவரை கைது செய்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு முறையின்றி அனுமதி வழங்கப்படுவதாக புகார் உள்ளது. கேரளாவில் சமீபத்தில்தான் இதுபோன்ற அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. முறையின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications