Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பெரிகார்டிடிஸ்'.. 7 வயது மாணவனுக்கு திடீர் மாரடைப்பு! நிகழ்விடத்திலேயே பலியான சோகம்! இதுதான் காரணமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் மாரடைப்பு ஏற்பட்டு 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் 'பெரிகார்டிடிஸ்' எனப்படும் 'இதய அழற்சி' நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

'பெரிகார்டிடிஸ்' என்பது அனைத்து வயதினருக்கும் வரும் நோய் என்றும் ஆனால் இது அரிதாகவே வரும் என்பதால் பயப்பட வேண்டியதில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த பாதிப்பு குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்

மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்

கர்நாடக மாநிலத்தின் மங்களூரு மாவட்டத்தில் உள்ள அமரமுத்னூர் கிராமத்தில் மோக்ஷித் எனும் 7 வயது சிறுவன் ஒருவன் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில், நிகழ்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு சிறுவன் வீடு திரும்பிய நிலையில் திடீரென மயங்கி விழுந்திருக்கிறான். உடனே மருத்துவமனையில் அவனை அனுமதித்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டான் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சு வலி

நெஞ்சு வலி

இதனையடுத்து சிறுவனின் உடற்கூறு ஆய்வு வெளிவந்தது. இதில் சிறுவனின் இறப்புக்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சிறுவனுக்கு 'பெரிகார்டிடிஸ்' எனும் இதய அழற்சி நோய் இருந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்த நோய் எல்லா வயதினரையும் தாக்கும் என்றாலும் மிக அரிதாகவே வரும் நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல சிறுவன் உயிரிழப்பதற்கு முன்னர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறான். அவ்வப்போது நெஞ்சு வலி என பெற்றோரிடம் கூறியுள்ளான்.

மருத்துவர்கள் சொல்வதென்ன?

மருத்துவர்கள் சொல்வதென்ன?

ஆனால் இது குறித்து உரிய பரிசோதனை செய்யாததால் தற்போது சிறுவன் உயிரிழந்துள்ளான் என பிரதேச பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதயத்தின் பெரிகார்டியத்தில் ஏற்படும் வீக்கம்தான் பெரிகார்டிடிஸ் என அழைக்கப்படுகிறது. வைரஸ், பூஞ்சை உள்ளிட்ட தொற்றுக்களால் இந்த பாதிப்பு ஏற்படலாம். அதேபோல இதயம் உள்ள பகுதியில் ஏதேனும் பலத்த அடி பட்டாலும் இந்த பாதிப்பு ஏற்படும். இந்த பகுதி வழவழப்பான ரசாயனம் கொண்ட பகுதியாகும்.

வகைகள்

வகைகள்

இவ்வாறு அடிபடும்போதும், மேற்குறிப்பிட்ட காரணங்களாலும் இந்த ரசாயன திரவம் கசிந்து அப்பகுதி வீக்கமடைந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. பெரிகார்டிடிஸ் பொதுவாக நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் வகை இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தும். பின்னர் நின்றுவிடும். அடுத்த வகை இதேபோல நெஞ்சு வலி 4-6 வாரங்களுக்கு பிறகு ஏற்படும். மூன்றாவது வகையில் நெஞ்சு வலி சில வாரங்கள் இடைவெளி விட்டு உருவாகி 3-6 வாரங்கள் வரை நீடித்து இருக்கும். அடுத்தது நான்காவது வகை. இது தொடக்கத்தில் எதுவும் சரியாக தெரியாது. ஆனால் நாளாக நாளாக நெஞ்சு வலி அதிகரிக்க தொடங்கும். மற்ற மூன்று வகைகளில் இருப்பது போன்று இடைவெளி எதுவும் இருக்காது என்ற மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+