முஸ்லிம் தொப்பி அணிந்த மாணவர் மீது தாக்குதல்! கர்நாடக கல்லூரியில் முடியாத சர்ச்சை! தலையிட்ட கோர்ட்
பெங்களூர்: கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனைக்கு மத்தியில் கல்லூரி வளாகத்தில் முஸ்லிம் தொப்பி அணிந்திருந்த மாணவரை திட்டி தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் நீதிமன்ற உத்தரவுப்படி கல்லூரி முதல்வர், போலீஸ் எஸ்ஐ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் தெரதாள் நகரில் அரசு டிகிரி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 19 வயது நிரம்பிய நவீத் ஹாசன் சாப் என்பவர் படித்து வருகிறார்.
கர்நாடக கல்லூரி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி மாதத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வகுப்புக்குள் அனுமதி மறுப்பு
இந்த வேளையில் நவீத் ஹாசன் சாப் முஸ்லிம்களுக்கான தொப்பி அணிந்து கல்லூரி வளாகத்தில் நின்றார். அப்போது அரசு மதம் சார்ந்த உடைகள், அடையாளங்கள் அணிந்து செல்ல எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் கல்லூரி முதல்வர் நவீத் ஹான் சாப்பை கல்லூரி வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

மாணவர் மீது தாக்குதல்
மேலும் கல்லூரி முதல்வர், ஊழியர்கள், போலீஸ் எஸ்ஐ ஒருவர் என மொத்தம் 7 பேர் மாணவரின் மதநம்பிக்கை பற்றி தவறாக பேசியதோடு, தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்லூரி முதல்வர், எஸ்ஐ உள்பட 7 பேர் மதநம்பிக்கை குறித்து அவதூறாக பேசி தாக்கியதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரி இருந்தார்.

வழக்குப்பதிவு
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கல்லூரி முதல்வர், எஸ்ஐ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதனடிப்படையில் 7 பேர் மீதும் தெரதாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த வழக்கு ஜமகண்டி துணை எஸ்பி விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

மாணவர் மீது புகார்
முன்னதாக தனது பணிக்கு இடையூறு செய்ததாகவும், தாக்கியதாகவும் கல்லூரி முதல்வர் சார்பில் மாணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. இது நிலுவையில் உள்ள நிலையில் தான் தான் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கல்லூரி முதல்வர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications