Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைக்கேறிய உல்லாசம்.. ஜன்னலில் உருவம்.. போலீசுக்கு ஓடிய பெண்.. பெங்களூர் தண்ணி பிரச்சனையில் இது வேற

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: குளிப்பதற்கும், குடிப்பதற்கும்கூட தண்ணீரின்றி தத்தளித்து கிடக்கிறது சிலிக்கான் சிட்டி.. இப்படிப்பட்ட சூழலில், வினோத பிரச்சனையுடன் போலீசுக்கு சென்றுள்ளார் பெண்மணி ஒருவர்.

அந்த பெண்ணுக்கு 44 வயதாகிறது.. இவர் கிரிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் ஒன்றை கொண்டுபோயிருக்கிறார்.. அந்த புகாரை பார்த்ததுமே போலீசுக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.

Bangalore 44 year old woman registered a complaint against a couple for open window romance

காரணம், தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோடி எப்போதும் ரொமான்ஸ் செய்து கொண்டு உல்லாசமாக இருப்பதாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

உல்லாசம்:
அதாவது, தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் தன்னுடைய மனைவியுடன் எப்போதுமே உல்லாசமாக இருப்பாராம்.. அதுவும் தன்னுடைய வீட்டு கதவு, ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டே, தம்பதியினர் சந்தோஷமாக இருக்கிறார்களாம்... அதிகப்படியான உல்லாசமாக இந்த தம்பதியினர் நடந்து கொள்கிறார்களாம்.. அந்த இளம் தம்பதியினரின் காதல் சைகைகள், இந்த பெண்ணுக்கு எரிச்சலை தருகிறதாம்..

தொடர்ந்து அந்த புகாரில் அவர் சொன்னபோது, "பக்கத்து வீட்டில் இருக்கும் தம்பதியினர் வெளிப்படையாக உல்லாசமாக நடந்து கொள்வது, என்னுடைய குடும்பத்தினரை வருத்தம் அடையச் செய்கிறது. இது தொடர்பாக அவர்களிடம் தட்டிக்கேட்ட முயன்றபோது மிரட்டல் விடுக்கிறார். தம்பதியினரின் உல்லாச நடவடிக்கைகள், எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

ஹவுஸ் ஓனர்: வீட்டின் உரிமையாளர் சிக்கனா மற்றும் அவரது மகன் மஞ்சுநாத் ஆகியோர் அந்த தம்பதியினருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பிறரின் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று என்னை அவர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த புகாரையடுத்து, அந்த தம்பதிக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 504, 506, 509, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம்.. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல், குற்றமிழைப்பு, வார்த்தை, சைகை போன்ற குற்றங்கள் குறித்து போலீசார், எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறதாம். இதற்குபிறகுதான், சம்பந்தப்பட்ட தம்பதியிடம் விசாரணை மேற்கொள்ளும் என தெரிகிறது.

அதிர்ச்சி:
ஏற்கனவே குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு புகாரா? என்று அதிர்ந்து கேட்கிறார்களாம் பெங்களூர்வாசிகள்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+