Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவையும் புரட்டி எடுக்கும் பெஞ்சல் புயல் தாக்கம்: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு லீவ்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வங்க கடலில் நிலை கொண்டு புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பெஞ்சல் புயல் வலுவிழந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை புரட்டி எடுத்துவிட்டு கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைந்தது. இதனால் பெங்களூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டியது. தற்போது அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கும் பெஞ்சல் புயலால் கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்தது பெஞ்சல் புயல். இந்த புயல் வங்க கடலில் பெரும் கண்ணாமூச்சி ஆட்டத்தையே ஆட்டிக் காட்டிவிட்டது. முதலில் புயல் வலுவிழந்தது; பின்னர் திடீரென புயலானது; ஒரு கட்டத்தில் பல மணிநேரம் நகராமல் நிலை கொண்டிருந்தது; பின்னர் புயல் கடக்கப் போகும் பாதை குறித்து தெளிவற்ற நிலை உருவானது.

cyclone fengal tamilnadu karnataka

இத்தகைய போக்கு காட்டிய பெஞ்சல் புயல் ஒருவழியாக புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆனால் கரையைக் கடந்தும் வலுவிழக்காமல் வட தமிழ்நாட்டின் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மையம் கொண்டு பெருமழையைக் கொட்டித் தீர்த்துவிட்டது. விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செமீ மழையை கொட்டித் தீர்த்துவிட்டது இந்த பெஞ்சல் புயல்.

இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வரலாறு காணாத பெருவெள்ளத்தில் சிக்கின. அத்தனை அணைகளும் நிரம்ப, உபரி நீர் பெருமளவு திறந்துவிட ஆறுகளின் கரைகளை தழுவியபடி வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் விழுப்புரம் மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னை- திருச்சி இடையே ரயில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் கேரளாவின் வயநாட்டை நினைவுபடுத்தும் வகையில் பயங்கர நிலச்சரிவும் நிகழ்ந்தது. இதில் 7 பேர் உயிருடன் புதையுண்டு போயினர். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டமும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்ற பெஞ்சல் புயல் வலுவிழந்த நிலையில் கர்நாடகாவின் பெங்களூர் வழியாக அரபிக் கடல் நோக்கிச் சென்றது. தற்போது அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை கொண்டிருக்கிறது இந்த பெஞ்சல் புயல். இப்புயலின் தாக்கத்தால் பெங்களூரில் நேற்று கனமழை கொட்டியது. கர்நாடகாவின் பல மாவட்டங்களிலும் பெருமழை கொட்டியது. இன்றும் கர்நாடகாவின் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+