கர்நாடகாவில் காங். ஆட்சிக்கு வந்தால் மத கலவரங்கள் நடைபெறும்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத கலவரங்கள் நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு அரசியலும் வரும்; மத கலவரங்களும் வந்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி என்பது பின்னோக்கியதாகிவிடும்.

கர்நாடகாவில் அரசியல் நிலைத்தன்மையை வாக்காளர்கள் தர வேண்டும். கர்நாடகாவை புதிய பாதையில் பயணிக்க வைக்க பாஜகவால் மட்டுமே முடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஊழல் பெருகிவிடும். சிறுபான்மையினருக்கு ஆதரவான நிலையை எடுப்பார்கள்.
இடஒதுக்கீடு என்பது மத அடிப்படையாக இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொன்டவர்கள். ஆகையால் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியானது காலாவதியாகிவிட்டது. பாஜகவில் இருந்து செல்கின்ற தலைவர்களை வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது பாஜக.
ஜேடிஎஸ் கட்சிக்கு வாக்களிப்பதும் காங்கிரஸுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். உங்களுடைய வாக்குகளை காங்கிரஸுக்கு செலுத்த விரும்பவில்லை எனில் பாஜகவுக்கு செலுத்துங்கள். அப்போதுதான் கர்நாடகா மாநிலம் வளர்ச்சி அடையும்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் என்பது ஒரு எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்கக் கூடியது அல்ல. ஒட்டுமொத்த கர்நாடகா மாநிலத்தின் எதிர்காலத்தையுமே இந்த தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடி கைகளில் ஒப்படைப்பதுதான் கர்நாடகா சட்டசபை தேர்தல். ஆகையால்தான் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.
கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட்டது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக திடீரென இந்த 4% இடஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் கர்நாடகாவின் பெரும்பான்மை சமூகங்களான லிங்காயத்துகள், ஒக்கலிகா சமூகங்களுக்கு இந்த 4% இடஒதுக்கீடு பிரித்து தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒவ்வொரு கூட்டத்திலுமே 4% முஸ்லிம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அமித்ஷா பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
தேர்தலுக்கு 10 நாள் கூட இல்லை.. அமித் ஷா கைகளுக்கு போன முக்கியமான ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் மம்தா












Click it and Unblock the Notifications