‛‛ஒரு மாம்பழம் ரூ.10,000’’.. மியாசாகியால் லட்சாதிபதியான கர்நாடகா விவசாயி.. அப்படி என்ன ஸ்பெஷல்?
பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த விவசாயி தனது தோட்டத்தில் விளையும் ‛மியாசாகி' மாம்பழம் ஒவ்வொன்றையும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருகிறார். இதனால் அவர் தற்போது லட்சாதிபதியாக மாறியுள்ளார். இந்நிலையில் தான் அவர் விற்கும் ‛மியாசாகி' மாம்பழம் ஒன்று எப்படி ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது? அதன் சிறப்பு என்ன? என்பது பற்றிய சுவாரசிய தகவலை இங்கு பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் கல்கேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத் கோன்கார். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் பழங்களை பயிரிட்டுள்ளார். ஒவ்வொரு சீசனிலும் தோட்டத்தில் விளையும் பழங்களை பறித்து விற்பனை செய்தும் வருகிறார்.

இந்நிலையில் தான் பிரமோத் கோன்கார் அரியவகை ‛மியாசாகி' மாம்பழம் மூலம் லட்சாதிபதியாகி உள்ளார். அதாவது பிரமோத் கோன்கார் தனது தோட்டத்தில் கடந்த 2012ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் இருந்து அரியவகை ‛மியாசாகி' மா கன்றை கொண்டு வந்து தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.
தற்போது இந்த மாமரம் காய்க்க தொடங்கி உள்ளது. இந்த ஒரு ‛மியாசாகி' மாமரத்தால் அவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் அவர் தனது மரத்தில் விளைந்த ‛மியாசாகி' மாம்பழம் ஒன்றை அங்குள்ள விவசாய கண்காட்சியில் வைத்துள்ளார். இது அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. மேலும் பல விவசாயிகள் அந்த மாம்பழம் பற்றியும், அதன் அறுவடை பற்றியும் கேட்டு செல்கின்றனர்.
இன்னும் சிலர் மாம்பழத்தின் விலையை கேட்டு பிரமிக்கின்றனர். இதுபற்றி பிரமோத் கோன்கார் கூறுகையில், ‛‛நான் 1985 முதல் மாம்பழ வியாபாரம் செய்து வருகிறேன். இதற்காக மாமரங்களை வளர்த்த வருகிறேன். நான் ஒரெயோரு ‛மியாசாகி' மாமரத்தை வளர்த்து வருகிறேன். இது ஜப்பான் நாட்டை மரமாகும். இந்த மாமரம் இங்குள்ள தட்பவெப்ப நிலையை ஏற்றுக்கொண்டு வளர்ந்துள்ளது.
இந்த மரம் ஆண்டுக்கு 14 பழங்களை தருகிறது. சமீபத்தில் ஒரு டஜன் மாம்பழங்களை ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை செய்தேன். இந்த பழம் சத்து நிறைந்தது என்பதோடு அரிய வகை பழமாகும். இதனால் அரியவகை பழம் என்பதால் விலை அதிகம். இந்த மாம்பழத்தில் வைட்டமின் ஏ , பி மற்றும் சி ஆகியவை உள்ளன.
அதோடு சருமத்துக்கு இந்த பழம் சிறந்ததாகும். ஒவ்வொரு மாம்பழமும் 200-350 கிராம் எடையுடன் இருக்கும். கொப்பல் ஒருவரிடம் ஒரு பழத்தை ரூ.10 ஆயிரத்துக்கு விற்றுள்ளேன். ஆனால் கர்நாடகாவை சேர்ந்தவர் இந்த பழத்தை வாங்குவது இல்லை. இதனால் மற்றவர்களிடம் விற்பனை செய்துள்ளேன். பாதுகாப்பு கருதி இந்த மாம்பழத்தின் உண்மையான விலையை என்னால் வெளிப்படையாக கூற முடியாது " என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications