கர்நாடகாவில் சுடுகாட்டிலும் காத்திருக்க வேண்டிய அவலம்.. சொந்த இடங்களில் உடலை தகனம் செய்ய அனுமதி
பெங்களூரு: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்கள் அல்லது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் தகனம் அல்லது அடக்கம் செய்யக் கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மற்ற மாநிலங்களைப் போலவே கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் 50% படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனப் பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவைப் பல மருத்துவமனைகள் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்காததற்காக 66 மருத்துவமனைகளுக்குப் பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போது பெங்களூருவில் நான்குக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவையைச் சமாளிக்கக் 1,500 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை தினசரி அனுப்புமாறு கர்நாடக மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார்.
கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், உயிரிழந்தவர்களின் உடலைத் தகனம் செய்வதில்கூட சிக்கல் எழுந்துள்ளது. உயிரிழந்தவரின் உடலை வைத்துக் கொண்டே பல மணி நேரம் வரை காத்திருக்கும் அவல சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்கள் அல்லது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் தகனம் அல்லது அடக்கம் செய்யக் கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications