கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு 4.5 கோடியில் வைரகிரீடம் வழங்கிய இளையராஜா.. நெகிழ வைத்த பின்னணி
பெங்களூர்: இளைஞானி இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் வருகிற 13-ந்தேதி இளையராஜா பொன்விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இளையராஜா நேற்று உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் அம்மனுக்கு ரூ.4½ கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். தனது வாழ்க்கையில் கொல்லூர் மூகாம்பிகை அம்மனால் தான் அதிசயம் நடந்ததாக இளையராஜா பலமுறை கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலாகும். இந்த கோயில் சக்தி தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக உள்ள ஸ்ரீ மூகாம்பிகை அம்மன். இவர் சரஸ்வதி, லட்சுமி, மற்றும் பார்வதி ஆகிய மூன்று தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகிறார்.

மூகாசுரன் என்ற அரக்கனை இந்த தேவி வதம் செய்ததால், மூகாம்பிகை என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆதி சங்கரர் இக்கோயிலுக்கு வந்தபோது, இங்கிருந்த அம்மன் மீது மிகவும் ஈர்க்கப்பட்டு, மூகாம்பிகை அம்மனின் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்ததாக வரலாறுகள் உள்ளது. மிகவும் கலைநயம் மிக்க இக்கோயிலில் கருங்கல்லினால் செதுக்கப்பட்ட பல சிலைகள் உள்ளன. கோயிலின் கருவறை மிகவும் சக்தி வாய்ந்தது என்று நம்பப்படுகிறது.
கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி அம்மனை வழிபடுவார்கள். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் பலர் தினமும் வருவார்கள். தென் மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் உள்ள பக்தர்கள் அடிக்கடி வருவார்கள்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எப்படி என்றால், இளையராஜாவிற்கு இஷ்ட தெய்வமாகும். இந்நிலையில் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதயொட்டி தமிழக அரசு சார்பில் வருகிற 13-ந்தேதி இளையராஜா பொன்விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் இளையராஜா நேற்று உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் அம்மனுக்கு ரூ.4½ கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். மேலும் வீரபத்ர தேவர் சாமிக்கு வெள்ளி கிரீடமும், வாளையும் காணிக்கையாக இளையராஜா வழங்கினார்.
முன்னதாக இந்த ஆபரணங்கள் அனைத்தும் கோவிலை சுற்றி ஊர்வலமாக மேளதாளம் முழங்க எடுத்துவரப்பட்டது. பின்னர் கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடத்தை இளையராஜா வழங்கி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அப்போது அவர் மனம் உருகி அம்மனை வேண்டினார். தனது வாழ்க்கையில் கொல்லூர் மூகாம்பிகை அம்மனால் தான் அதிசயம் நடந்ததாக நம்பி வரும் இளையராஜா, இதனால் அம்மனை தரிசிக்க பலமுறை இளையராஜா வந்துள்ளார். அதன்படி தற்போது அவர் சினிமாவில் பொன்விழா கொண்டாடும் நிலையில் கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைரகிரீடத்தை காணிக்கை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications