பெங்களூருவில் டிசம்பர் 31 மாலை 6 மணி முதல் 144 தடை.. கடும் கட்டுப்பாடு.. போலீஸ் கமிஷ்னர் அதிரடி
பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷ்னர் கமல் பந்த் அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். குறிப்பாக எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு பகுதிகளில் விடிய, விடிய பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்நிலையில குண்டுவெடிப்பு மற்றும் பாலியல் தொல்லை போன்ற சம்பவங்கள் காரணமாக எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு, சர்ச் தெரு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட நள்ளிரவு 12 மணி முதல் 12.05 மணி வரை 5 நிமிடம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் உள்ளது. இதை தடுக்க கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி, பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.
இந்நிலையில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பெங்களூருவில் டிசம்பர் 31ம் ததி மாலை 6 மணி முதல் மறுநாள்(புத்தாண்டு அன்று) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு, சர்ச் தெரு, கோரமங்களா, இந்திராநகரில் உள்ள பகுதிகள் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத மண்டலக்களாக்கப்படும். விடுதிகள், பார்கள், உணவகங்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications