தீவிரவாதியை புகழ்ந்து 'வாட்ஸ் அப்' ஸ்டேடஸ்... கல்லூரி மாணவன் கைது... பெங்களூரில் பரபரப்பு
பெங்களூரு: ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பின் முகப்பு படமாக வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளது. நாட்டையே கொந்தளிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
பாகிஸ்தானை தலைமை இடமாக செயல்படுகிறது ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு. இந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 23 வயதான அடில் அஹ்மத் தர் மற்றும் உடல் சிதறி வீரமரணம் அடைந்த சடலங்களை WhatsApp இல் ஸ்டேடஸ் படமாகக் காட்சிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பெங்களூரில் கைது
ரேவா பல்கலைக்கழக மாணவரான தஹிர் லத்தீஃப் (23) கைது செய்யப்பட்டவர் ஆவார். ஜம்மு காஷ்மீரின் பராமுலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் புகார்
"இந்த துணிச்சலான மனிதனுக்கு ஒரு பெரிய வணக்கம்! அல்லாஹ் உங்கள் ஷாஹாதாவை ஏற்றுக்கொள்ளுங்கள், ஜனாஹ் # ஷஹீத் அடில் பாய் மிக உயர்ந்த இடம் தருவர்" என்று அந்த வாட்ஸ் அப்பில் மாணவன் குறிப்பிட்டு இருந்தார். சக மாணவர்களின் புகார் அடிப்படையில், 1967 சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், மற்றும் 120 (பி) (குற்றவியல் சதி) உட்பட பல்வேறு IPC பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஷ்வ இந்து பரிஷத் புகார்
முன்னதாக, விஷ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த கிரிஷ் பரத்வாஜ் என்பவரின் புகாரைத் தொடர்ந்து, காஷ்மீர் இளைஞர் அபீத் மாலிக்கிற்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு ஐபிசி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டது.
உண்மையான அறுவை சிகிச்சை
தாக்குதலுக்குப் பிறகு ஒரு செய்தி சேனலால் வெளியிடப்பட்ட சில படங்களை பகிர்ந்து கொண்டதுடன், தனது FB பக்கத்தில் 'உண்மையான அறுவை சிகிச்சை' என்ற தலைப்பின் கீழ் இளைஞர்களையும் சேர்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கிடுக்குபிடி விசாரணை
விசாரணையின் போது, அவர் பெங்களூரின் பிரபல கல்லூரியில் படித்தார் என்றும், விளம்பர தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த அபீத் மாலிக், தனது சொந்த மாநிலத்திற்கு திரும்பினார் என்றும், அவர் பெங்களூரில் வசித்து வந்தார் என்று அவரது சுயவிவரத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர். புகாரை தொடர்ந்து, பேஸ்புக்கில் அந்த கணக்கு நீக்கப்பட்டது.