மின்னல் வேகம்.. சாலையோரம் நின்ற லாரி மீது மோதிய கார்.. 13 பேர் உயிரிழப்பு.. கர்நாடகாவில் சோகம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது டாட்டா சுமோ மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து டாட்டா சுமோ ஒன்று பெங்களூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. இதில், 3 வயது குழந்தை, 4 பெண்கள் உள்பட மொத்தம் 14 பேர் இருந்தனர். இந்த டாட்டா சுமோ கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுரம் மாவட்டம் பாகெப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில் நாகாலாந்தில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்திருந்த லாரி ஒன்று அதே சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அந்த பகுதியில் அதிகளவு பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் செல்லும் வாகனம் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 14 பேருடன் வந்த டாட்டோ சுமோ கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. டாட்டா சுமோவும் அதி வேகத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் லாரி மீது மோதியதில் டாட்டா சுமோ சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி 3 வயது குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 7 பேர் உயிரிழந்தனர். இதேபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
லாரி மீது டாட்டா சுமோ மோதியதில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே விபத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் பெங்களூர் ஒங்கசத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், தசரா பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றுவிட்டு திரும்பிய போது விபத்து நேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications