பெங்களூரில் பிரமாண்ட தமிழ் புத்தக திருவிழாவிற்கு ஏற்பாடு.. கல்லூரி மாணவர்களுக்கு மொழிதிறன் போட்டி!
பெங்களூர்: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து பெங்களூரில் 25.12.2022 முதல் 1.1.2023-ஆம் நாள் வரையில் 8 நாட்களுக்கு நடத்தப்படும் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக இணையவழியில்
கல்லூரி மாணவர்களுக்கான மொழித்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஓவியப் போட்டி- கட்டுரைப் போட்டி- கவிதைப் போட்டி- சொற்பொழிவுப் போட்டி என மொத்தம் ரூ.25 ஆயிரம் பரிசுகளை அள்ள வாய்ப்பு உள்ளது.
முதல் பரிசு: ரூ.3 ஆயிரம்
இரண்டாம் பரிசு: ரூ.2 ஆயிரம்
மூன்றாம் பரிசு: ரூ.1 ஆயிரம்
இவ்வாறு பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிபந்தனைகளாக, கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்
புகுமுக வகுப்பு, பட்ட வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் மாணவர்களுக்கு மின்-சான்றிதழ் வழங்கப்படும்!
பங்கேற்கும் கல்லூரிகளுக்கு கேடயம் வழங்கப்படும்!
தலைப்புகள்:
ஓவியப்போட்டி: நான் எழுதும் நூலின் அட்டைப்படம் (ஏ4 தாளில்)
கட்டுரைப்போட்டி: இந்த நூலை படிக்க மறந்திடாதீங்க! (300 சொற்கள்)
கவிதைப் போட்டி: தமிழே நமது வேர்!(24 வரிகளுக்குள்)
சொற்பொழிவுப்போட்டி: செந்தமிழ் நூலைப்படி! (7 நிமிடங்கள்)
ஓவியங்கள், கட்டுரைகள், கவிதைகளை என்ற [email protected] மின்னஞ்சலுக்கு 20.11.2022-ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
இணையவழியில் சொற்பொழிவுப் போட்டி நடக்கும் நாள்: 20.11.2022 (ஞாயிற்றுக்கிழமை), காலை 10.30 மணி. நடுவர்கள்: பேராசிரியர், முனைவர் கு.வணங்காமுடி, அறிஞர் சு.குமணராசன்.
முன்பதிவுக்கு: https://forms.gle/p4Xa8DgHwy4icy7v8
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.