பெங்களூருவில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் சம்பவம்? அதிர வைத்த பெண்ணின் புகார்
பெங்களூர்: ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதுடன் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெங்களூரில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூர் பசவனகுடி பகுதியை சேர்ந்தவர் பூர்ணசந்திரா என்ற தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு, கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி பூர்ணசந்திரா தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வரதட்சணை வாங்கி வர அவரது மனைவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பூர்ணசந்திரா தினமும் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தாராம்.

ஒருகட்டத்தில் தனது மனைவியை, அவரது பெற்றோர் வீட்டிற்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தியாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் சகோதரர் உடனடியாக ரூ.2 லட்சத்தை பூர்ணசந்திராவிடம் கொடுத்திருக்கிறார். எனினும் தனக்கு கூடுதலாக ரூ.8 லட்சம் வேண்டும் என கேட்டு மனைவியை அடித்து கொடுமை செய்தாராம்.
இந்த நிலையில் பூர்ணசந்திரா, மனைவியை தன்னுடைய நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. நண்பர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு தனது மனைவியை பூர்ணசந்திரா கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அதற்கு மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பூர்ணசந்திரா தனது மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து , தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கவில்லை என்றால், ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கணவனுக்கு எதிராக பெங்களூர் பசவனகுடி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பூர்ணசந்திராவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்திய சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பூர்ணசந்திரா மற்றும் அவரது நண்பர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்..
மேற்கத்திய நாடுகளில் உள்ளது போன்று கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் முறை நடந்தது. சென்னையிலும் இப்படி ஒரு புகார் அண்மையில் எழுந்தது. இந்நிலையில் பெங்களூரிலும் அதேபோன்று மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் சம்பவம் நடந்ததா என்றும் இந்த சம்பவத்தை வைத்து விசாரித்து வருகிறார்கள்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications