வீடு, கடை வாடகை வருமானம் ரூ.20 லட்சத்திற்கு அதிகமானால் ஜிஎஸ்டி வரி அவசியம்
டெல்லி: வீடு மற்றும் கடை வாடகை மூலம் வரும் வருமானத்திற்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கட்டிடங்களை வணிக பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டினால், அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தச் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1ஆம் தேதி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டியில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வீடு, கட்டிடங்களை வர்த்தக ரீதியில் வாடகை அல்லது ஒத்திகைக்கு விடுவதன் மூலம் ரூ.20 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கிடைக்கும் பட்சத்தில், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி செலுத்தியாக வேண்டும் என மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.
வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஜிஎஸ்டியில் எந்த வரியும் இல்லை என்று ஹஸ்முக் ஆதியா கூறியுள்ளார். அதே நேரத்தில் வர்த்தக ரீதியில் வாடகை பெறும்போது, அவ்வருமானம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால் அதற்கு வரி வரி செலுத்த வேண்டும். அவ்வாறு வாடகை பெறுபவர்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதே சமயம், குடியிருப்பு, கடை அல்லது அலுவலக வாடகை மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக வருமானம் ஈட்டுவோருக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்றும் ஹஸ்முக் ஆதியா கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications