ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு சலுகை வெளியாகும் – நிர்மலா சீதாராமன்
ஆன்லைன் மூலம் தொழில் துவங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பல சிறப்பு சலுகைகளை வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
டெல்லி: ஸ்டார்ட் அப் இந்தியா என்னும் மத்திய அரசின் புதிய திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.
மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறையானது, தொழில் தொடங்குவதற்கான பரிந்துரைகள் பட்டியலை மத்திய நிதி அமைச்சகத்திற்கு சமர்பித்திருந்தது. அது தொடர்பான சில கருத்துக்களை நிர்மலா சீதாராமன் பகிர்ந்து கொண்டார்.

அதில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் இருந்து சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளனர். அதனை நாங்கள் அந்த பரிந்துரைகளை எல்லாம் மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆன்லைன் மூலம் தொழில் துவங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவற்றை ஊக்குவிப்பதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு வரிச்சலுகை உள்பட ஏராளமான கூடுதலாக சில சலுகைகளையும் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பான நல்ல செய்தி பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இந்தியாவில் ஆன்லைனில் தொழில் துவங்குவதற்கான ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் கடந்த 2016ஆம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததால், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் சில அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்குபவர்களுக்கு சில பிரச்சனைகள் இருப்பதையும், அதை அவர்களே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications