'எனது தலையே போனாலும், விவசாயிகளுக்கு எந்த தீங்கும் வர விட மாட்டேன்' -பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்
சண்டிகர்: எனது தலையே போனாலும், விவசாயிகளுக்கு எந்தத் தீங்கும் வரமாட்டேன் என்று பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே இங்கு உட்கட்சி பூசல் நடந்து வருகிறது. பஞ்சாப் காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துக்கும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் இடையில் கடும் பனிப்போர் நிலவியது
இடையில் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. நவ்ஜோத் சிங் சித்துவும், அமரீந்தர் சிங்கும் டெல்லி சென்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முறையிட்டனர்.

அதிருப்தி
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏதும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்று சோனியா காந்தி அவர்களை சமாதானம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து அமரீந்தர் சிங்குக்கு எதிராக அனைவரும் திரண்டனர். முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் மீது எம்.எல்.ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ராஜினாமா
தனக்கு எதிராக நடந்து வருகிற சமீபத்திய நிகழ்வுகளை வேதனையுடன் விவரித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர்சிங். சித்துவுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அமரீந்தர்சிங் குண்டை தூக்கி வீசினார் பஞ்சாப் அடுத்த முதல்வர் யார்? என்ற விவாதம் எழுந்த நிலையில் முதல்வர் பதவி வேண்டாம் என்று கட்சி தலைவர்கள் பலரும் அலறியடித்து ஓடினார்கள்.

சரண்ஜித் சிங் சன்னி
நீண்ட ஆலோசனைகளின் முடிவில் சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தலித் தலைவரான சரண்ஜித் சிங் சன்னி தொழில்கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தார். இந்த நிலையில் பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தலையே போனாலும்...
இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது:- நான் மண் மற்றும் வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு வீட்டிலிருந்து வந்தவன். நான் ஒரு ஏழை மனிதனின் பிரதிநிதி. நான் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வர விடமாட்டேன். இன்று மணல் மாஃபியா குறித்து முடிவெடுப்போம். நிலுவையில் உள்ள பில்களுக்காக ஒரு ஏழையின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. நாம் பஞ்சாபைப் பலப்படுத்த வேண்டும். இது விவசாயிகளின் நிலை. வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு நான் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எனது தலையே போனாலும், விவசாயிகளுக்கு எந்தத் தீங்கும் வரமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications