ஹரியானாவில் திடீர் பரபரப்பு..பசுவுடன் போலீஸ்நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை..டெல்லி நோக்கியும் பேரணி
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் தொடங்கிய போராட்டம் தற்போது வரை முடியவில்லை.
மூன்று சட்டங்களும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை என்பதை விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

ஹரியானாவில் போராட்டம்
பஞ்சாப் & ஹரியானா மாநிலங்களிலும் தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் ஜேஜேபி-பாஜக கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுநிகழ்ச்சிகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த ஜூன் 1ஆம் தேதி ஜேஜேபி எம்எல்ஏ தேவேந்தர் பாப்லி கலந்து கொண்ட போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. அதில் ஜேஜேபி எம்எல்ஏ தேவேந்தர் பாப்லியின் உதவியாளருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.

2 விவசாயிகள் விடுதலை செய்யப்படவில்லை
இருப்பினும், தன் மீதும் தனது உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிப்பதாக தேவேந்தர் பாப்லி தெரிவித்தார். இதையடுத்து தாக்குதல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 2 எஃப்ஐஆர்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், அதேநேரம், தேவேந்தர் பாப்லியின் வீட்டின் முன் போராட்டம் நடத்தியதாக புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 27 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவரை மட்டும் தற்போது வரை விடுதலை செய்யப்படவில்லை.

பசுவுடன் போராட்டம்
இந்நிலையில், அந்த 2 விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதில் ஒரு விவசாயி தன்னுடன் பசுவையும் அழைத்துச் சென்றுவிட்டார். வீட்டில் பசுவைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதால் கையுடன் கூட்டி வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸ் நிலையத்திலேயே போராட்டக்காரர்கள் இருந்தனர்.

உடன்பாடு இல்லை
இது தொடர்பாக நேற்று மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இருப்பினும், கைது செய்யப்பட்டவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதாகவும் இது தொடர்பாக விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் அம்மாநில உள் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார். நிலைமை மோசமாதவைத் தடுக்க அங்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் டெல்லியை நோக்கி பேரணி
இந்தச் சூழலில், மறுபுறம் பாரதிய கிசான் யூனியன் (சாருனி) தலைவர் குர்ணம் சிங் சாருனி தலைமையில் விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் எல்லையிலிருந்து டெல்லிக்கு முற்றுகையிட்டு பேரணி நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தப் பேரணி காரணமாக NH 44 சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் வரும் ஜூன் 10ஆம் தேதி 2,500 வாகனங்களுடன் மிகப் பெரியளவில் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications