கடைசி பட்ஜெட்.. விவசாயிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் பஞ்சாப் அரசு.. ரூ 1,186 கோடி விவசாய கடன் தள்ளுபடி
சண்டிகர்: சுமார் 1.13 லட்சம் விவசாயிகளின் 1,186 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாகப் பஞ்சாப் அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெரும்பாலான விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகும்.

விவசாயிகளின் போராட்டத்திற்குப் பஞ்சாப் அரசு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநிலத்தின் நிதி அமைச்சர் மன்பிரீத் சிங் பாடல் பஞ்சாப் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இதில் விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட வேளாண் துறையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
சுமார் 1.13 லட்சம் விவசாயிகளின் 1,186 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அமைச்சர் மன்பிரீத் சிங் பாடல் அறிவித்தார். மேலும், நிலமற்ற விவசாயிகளுக்கு 526 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
சுமார் 1,68,015 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களும் அறிவிப்புகளும் இதில் இடம் பெற்றிருந்தது. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அளிக்கப்படும் மாத ஓய்வூதியத்தை ஏப்ரல் 1 முதல் ரூ.7,500இல் இருந்து ரூ.9,400 ஆக உயர்த்துவதாகவும் அவர் அறிவித்தார். இதேபோல முதியோர் ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.750இல் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும். ஏனென்றால், பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications