மண்டையை பிளக்கும் கத்தரி வெயில்.. இன்று 11 இடங்களில் சதமடித்த வெயில்.. எங்கு அதிகம் தெரியுமா
சென்னை: தமிழகம் கத்தரி வெயில் தொடங்கி சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.
புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல காரணங்களால் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட மோசமாக மாறி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது
கத்தரி வெயில் காலத்தில் மட்டுமே வெயில் காலத்தில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற நிலை மாறி, இப்போதெல்லாம் மார்ச் மாதமே வெயில் தாக்கம் மோசமடைய தொடங்கிவிட்டது.

கத்தரி வெயில்
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த மே 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கத்தரி வெயில் காலம் மே 4 முதல் வரும் 28ஆம் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெளியின் தாக்கம் இயல்பை விட சில டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என்பதால் மதிய நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிரட்டும் வேலூர்
இதனிடையே தமிழ்நாட்டில் இப்போது கத்தரி வெயில் தொடங்கி உள்ள நிலையில், மாநிலத்தில் 11 இடங்களில் வெப்ப நிலை சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் வெப்பம் 105.98 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான வெப்பத்தில் வேலூர் மாவட்டத்தில் தான் மிக அதிகம் ஆகும்.

சதமடித்த வெயில்
வேலூருக்கு அடுத்து தஞ்சை மாவட்டத்தில் வெப்பத்தின் அளவு 104 டிகிரி பாரன்ஹீட்டாக. அதேபோல திருத்தணியிலும் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவு ஆகியுள்ளது. அதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி பாரன்ஹீட் மற்றும் மதுரை நகர்ப் பகுதியில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல ஈரோடு (101) , கரூர் பரமத்தி (101) ஆகிய நகரங்களிலும் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது

சதமடித்த வெயில்
வேலூருக்கு அடுத்து தஞ்சை மாவட்டத்தில் வெப்பத்தின் அளவு 104 டிகிரி பாரன்ஹீட்டாக. அதேபோல திருத்தணியிலும் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவு ஆகியுள்ளது. அதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி பாரன்ஹீட் மற்றும் மதுரை நகர்ப் பகுதியில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல ஈரோடு (101) , கரூர் பரமத்தி (101) ஆகிய நகரங்களிலும் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது

10 நகரங்கள்
இந்த மாவட்டங்களைத் தவிரத் திருச்சி, திருத்தணி, தொண்டி, தூத்துக்குடி நகரங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தலைநகர் சென்னையைப் பொருத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 99.68 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நுங்கம்பாக்கத்தில் 97.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 11 இடங்களில் நகரங்களில் இன்று வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. கத்தரி வெயில் காரணமாக வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்!












Click it and Unblock the Notifications