சட்டசபை தேர்தல் தேதி விரைவில்.. தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி அரசாணை வெளியீடு!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, 1,249 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த பணியிடங்கள் அனைத்தும் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளுக்காக துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்காளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட கூடுதல் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் தொடர்பான பணிகள் அதிகரிக்கும் என்பதால் அந்த பணிகளை மேற்கொள்ள கூடுதல் அதிகாரிகளை பணியமர்த்தும் போது 1,249 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்காளர், தட்டச்சர் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில், மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்துதல், தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்தல், பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிதல்,
மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தை உருவாக்குதல், பல்வேறு தேர்தல் பணிகள் தொடர்பாக தினசரி அறிக்கை தயாரித்தல், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்த பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications