சட்டசபை தேர்தல் தேதி விரைவில்.. தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி அரசாணை வெளியீடு!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, 1,249 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த பணியிடங்கள் அனைத்தும் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளுக்காக துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்காளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட கூடுதல் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் தொடர்பான பணிகள் அதிகரிக்கும் என்பதால் அந்த பணிகளை மேற்கொள்ள கூடுதல் அதிகாரிகளை பணியமர்த்தும் போது 1,249 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்காளர், தட்டச்சர் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில், மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்துதல், தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்தல், பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிதல்,
மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தை உருவாக்குதல், பல்வேறு தேர்தல் பணிகள் தொடர்பாக தினசரி அறிக்கை தயாரித்தல், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்த பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விருத்தாசலத்திலிருந்து சட்டசபைக்கு செல்லும் பிரேமலதா? தேமுதிகவினருக்கு அண்ணியார் கொடுக்கும் பரிசு! -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.. சென்னையில் 3 நாட்களுக்கு தபால் வாக்கு சேகரிப்பு -
தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
46 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை.. தமிழக அரசியல் கட்சிகள் தயங்குவது ஏன்? பின்னணி -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
"அனல் பறக்கும் களம்.. ஆளை காணோம் விஜய்!" டூப் முதல் ஹாலோகிராம் வரை.. தவெகவின் 'சமாளிப்பு' அரசியல்! -
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி












Click it and Unblock the Notifications