18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு.. சென்னை ரெய்டில் போலீஸார் பகீர் தகவல்
சென்னை: சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் கார் சிலிண்டர் வெடித்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அங்கு நாட்டு மருந்துகள் கைப்பற்றப்பட்டன, அது போல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகளும் அவருடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன.

கார் வெடிப்பு சம்பவம்
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை உக்கடம் போலீஸார் விசாரித்து வந்த நிலையில் முபின் வீட்டில் சோதனையில் கிடைக்கப்பட்ட தகவல்களை வைத்து அந்த வழக்கானது என்ஐஏ அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தற்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு
இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவையில் மட்டும் 20 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் உக்கடம், கோட்டைமேடு, பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம்
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையின் பேரில் சென்னை மண்ணடியில் காவல் துறை சோதனை நடத்தியது. சென்னையில் மண்ணடி, புதுப்பேட்டை, பெரம்பூர் , ஜமாலியா உள்ளிட்ட 5 இடங்களில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தமிழக போலீஸார் சென்னையில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு
இதில் சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கொண்டு சென்னையில் மக்களுடன் மக்களாக கலந்திருந்ததும் தெரியவந்தது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் 5 பேர் மீது புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் இருக்கும் நபர்கள் குறித்த பட்டியலை தமிழக காவல் துறை தயார் செய்து வருகிறது. அது போல் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சோதனை மாலை வரை நீடிக்கும் என தெரிகிறது.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications