தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு.. அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
சென்னை: தமிழகத்தில் தினசரியும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோய் விரைந்து பரவும் தன்மையுடையது. இதனால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மக்கள் சுயமாக சிகிச்சை எடுக்கக் கூடாது.

மெட்ராஸ் ஐ
மெட்ராஸ் ஐ நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. யாருக்கும் இதுவரை கண்பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் தினந்தோறும் 4,500 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மெட்ராஸ் ஐ பாதித்ததால் குடும்ப நபர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கண் நோய்
கண் நோய் எனப்படும் மெட்ராஸ் ஐ பாதிப்பு இருந்தால் கண்கள் சிவந்து, எரிச்சலையும் உறுத்தலையும் கொடுக்கும். கண்களில் தண்ணீர் வரும். எனவே இந்த நோய் பாதித்தவர்கள் தாங்கள் பயன்படுத்திய உடமைகளை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. கண்களில் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டால் தாமாக மெடிக்கல் ஷாப் போய் சொட்டு மருந்து விட்டுக் கொள்ளுதல் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தொற்று வியாதி
கண் நோய் ஒரு தொற்று வியாதி என்பதால் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் பயன்படுத்திய பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். வெறுங்கண்களால் யாரையும் பார்க்கக் கூடாது. கருப்பு கண்ணாடி அணிந்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மழைக்காலம்
மழை காலம் தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கண் வெண்படல அழற்சி எனப்படும் தொற்று நோய் பரவி வருகிறது. கண் விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகிறது. கண் நோய்க்கான அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் கூறியுள்ளதாவது: கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் வந்து கொண்டே இருக்கும், கண்களில் இருந்து அழுக்கு வெளியேறி மேல் இமையும் கீழ் இமையும் ஒட்டிக் கொள்ளும், வெளிச்சத்தை பார்த்தாலே கண் கூசும்.

அலட்சியம் வேண்டாம்
சென்னையில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ அறிகுறியுடன் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகிறார்கள். இந்த நோய் காற்று மூலம் பரவுகிறது. இது 5 நாட்களில் குணமடையும். ஆனால் அலட்சியமாக இருந்து விட்டால் பார்வை பறிபோகவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications