சமாதியில் எழுதப்பட்ட வாக்கியம் தெரியும்.. கருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற "5 கட்டளைகள்" இதோ..
Recommended Video

சென்னை: கருணாநிதியின் சமாதியில் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன.
கருணாநிதியின் சிலை நேற்று அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தியால் திறக்கப்பட்டது. இதன் அருகே பழைய அண்ணா சிலையும் புனரமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சமாதியில் ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார் என்ற வாக்கியம் எழுதப்பட்டுள்ளது. அது போல் புதிதாக நிறுவப்பட்ட அவரது சிலையிலும் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன.
அவை மத்திய , மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் உள்ளது. அவை:
1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
5. மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி
ஆகிய 5 கட்டளைகள் சிலையில் இடம்பெற்றுள்ளன.
தலைவர் கலைஞர் அவர்களின் சிலையில் இடம் பெற்றுள்ள 5 கட்டளைகள்! #StatueOfHumanity#StatueOfKalaignar pic.twitter.com/AQ3dH4hTHK
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) December 16, 2018












Click it and Unblock the Notifications