"சிங்கப்பெண்ணே”.. வரலாற்றிலேயே முதல்முறை! எல்லையில் பெண் ராணுவ அதிகாரிகள் -புள்ளி வைத்தது சென்னைதான்
சென்னை: எல்லைப் பகுதியில் பணியாற்றும் பெண் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி சென்னை பரங்கிமலையில் அமைந்து இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்கள் லெப்டினண்டாக பதவியேற்றுக்கொண்டதை அடுத்து வரலாற்றிலேயே முதல்முறையாக எல்லைப் பகுதியில் பெண் ராணுவத்தினர் பணியாற்ற உள்ளனர்.
Recommended Video
சென்னை பரங்கிமலையில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் அமைந்து உள்ளது. இதில் ஏராளமான வீரர்களுக்கு முப்படைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவ பணிக்கான வீரர்கள் மட்டுமின்றி பிற நட்பு நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ராணுவ பயிற்சி மையத்தில் 11 மாத பயிற்சி பெற்ற அதிகாரிகளுக்கான நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் லெப்டினண்டாக 186 பேர் பதவியேற்றுக்கொண்டனர். இதில் இந்திய ராணுவத்துக்காக 121 ஆண் அதிகாரிகளும் 36 பெண் அதிகாரிகளுடம் நட்பு நாடுகளை சேர்ந்த 24 பெண் அதிகாரிகளும் 5 ஆண் அதிகாரிகளும் பயிற்சியை நிறைவு செய்தனர்.
பரங்கிமலையில் நடைபெற்ற இந்த நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வங்கதேசத்தின் தலைமை ராணுவ தளபதி சபியுத்தீன் ஹமீது வருகை தந்து பயிற்சி பெற்று பதவியேற்ற அதிகாரிகளுக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார். இந்த பயிற்சியை நிறைவு செய்த இந்தியாவின் பெண் ராணுவ அதிகாரிகளில், 5 அதிகாரிகள் இந்திய எல்லை பகுதிகளில் பணியாற்ற இருக்கிறார்கள். இவர்களுக்கு பீரங்கி படையில் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்திய முப்படைகளில் பெண்கள் இருந்தாலும், எல்லை பகுதியில் பெண்கள் இதுவரை பணிபுரிந்தது இல்லை. இந்த நிலையில் தற்போது இந்திய ராணுவ வரலாற்றிலேயே முதல் முறையாக 5 பெண்கள் இந்திய எல்லையோர ராணுவ பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இந்த பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக அஜய் சிங் கில் என்ற அதிகாரிகளுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. அவருக்கு அடுத்த இடம்பிடித்த அஜய் குமாருக்கு வெள்ளியும், அடுத்த இடத்தில் இருந்த மெஹக் சைனிக்கு வெண்கலமும் வழங்கப்பட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications