தமிழகத்தில் புதிதாக 505 பேருக்கு கொரோனா... குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 502 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் 134 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

502 new Covid cases, 7 deaths in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா உயிரிழப்பு 12,363 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 4,109 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனாவுக்கு 4,532 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 8,32, 842 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 8,21,947 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் மேலும் 517 பேர் டிஸ்சார்ஜ் செய்யபப்ட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கபட்டில் 30 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது. திருப்பூரில் 27, தஞ்சாவூரில் 25, ஈரோட்டில் 24 என கொரோனா பாதிப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+